மதுரை மீனாட்சி அம்மன்

மாமதுரை மங்கையர்கரசி....
உன் அழகு பெயரை செவி கொண்டு..
நித்தம் , உன் பாதம் பணிந்து,
நீ படியளக்கும் அன்பினால்...,
உன் அன்பின் விழி பட்டு,
பறக்கும் உள்ளமெல்லாம்,
அமைதி காணும்...

உன் கோவில் அழகு...
அதை சுற்றி வரும் தேர் கூட அழகு தான்....
அது உன்னை சுமந்து 
செல்லும்போது....
அந்த பொற்றாமரை குளம்
கூட அழகு தான்....
நீ அழைக்க...
உன் பாசத்தால் பணிந்து தரை இறங்கும் பறவைகளை கண்டபோது....

Archanakumar.

Popular posts from this blog